உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன்,
இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன்.
செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன்,
உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன்.
வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன்,
வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.
செல்லும்வழி திசை காட்டும் சூரியன்,
சோம்பல்தனை சுழற்றியடிக்கும் வல்லவன்.
புத்தம் புது உதயம் தரும் புதியவன்,
ஆற்றல் தந்து ஊக்கம் தரும் ஆதவன்.
வான்மதிக்கு ஒளியைத் தரும் நல்லவன்,
சுற்றிவரும் கோள்களுக்கொரு தலைவன்.
குளிருக்குக் கோடை போர்த்தும் கோமகன்,
பனித்துளியை மறைத்து வைக்கும் மாயவன்.
ஆழிநீரை மாரி ஆக்கும் தூயவன்,
ஞாலம் காக்கும் ஞானம் உள்ள நாயகன்.