பூனைக்குட்டி கத்துகிறது. PoonaiKutti Kaththukirathu.

    மதில்சுவர் கடந்த,  பக்கத்து வீட்டுத் தோட்டத்தில்,  செம்பருத்தி செடியின்  இரண்டடி உயரக் கிளையை  இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி,  பூனைக்குட்டி கத்துகிறது!   பயத்தின் பற்றுதலை  விடுவதற்குத் துணிந்தால்,  விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்!  விடாமல்  கத்துகிறது பூனைக்குட்டி!  …