கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும் சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது. நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற…
உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.…
அறிவு: உலகில், தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை. அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக் கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய மாற்றங்கள் இல்லை. இதனால் அவை பயனுள்ள புதிய வளர்ச்சிகள்…
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும்…
பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா என்றாலும் குதூகலத்தைத் தருகின்றாய்.…
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன. உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள்…