உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.…
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும்…
பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா என்றாலும் குதூகலத்தைத் தருகின்றாய்.…