அடிப்படை அவசியம். Adippadai Avasiyam.

 

தனியொருவனுக்கு:

 

வாழ்விடமே இல்லாதோர்

எங்கெங்கோ வசிக்கின்றார்.

வயிற்றுப் பசியைப் போக்கிடவும்

உணவுக்காக உழைக்கின்றார்.

 

உடுத்தியிருந்தால் நகர்ந்து சென்று

மற்றது எல்லாம் பெற்றிடுவார்.

அடிப்படை தேவை பெறுவதற்கே

உடனடி தேவை உடை என்றால்,

 

அரைமனித நிலைதன்னை

எந்த நிழலால் மறைத்திடுவார்?

துணிவே துணைதான் என்றாலும்

துணிந்து செல்ல துணி வேண்டும்.

 

தானத்தில் சிறந்த தானம்

எதுவோ எனக்குத் தெரியாது.

மானம் காக்க உடையைத் தவிர

முந்தி வருவது வேறேது?

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *