கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த முடியுமா? Kavana Sitharalai Kattuppaduththa Mudiyuma? How To Control Distraction?

அடையாளம்: இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் சந்திக்கும் கவனச்சிதறல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு சவாலாகவே இருக்கிறது.  இது, வயது வித்தியாசமின்றி எல்லோருடைய கவனத்தையும் தன்வசம் ஈர்த்து மனதை மடைமாற்றம் செய்கிறது.  இந்தக் கவனச்சிதறல் முதலில் கவரும் வகையில் மெதுவாக எட்டிப்பார்த்துப் பிறகு மனதையே…

குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? Kuzhanthaigalin Ulagam Eppadi Irukkirathu? How Is Childrens World?

குழந்தைகள்: பரிசுத்தமான வெள்ளைக் காகிதம் போல குழந்தைகள் பிறக்கிறார்கள்.  அவர்களைச் சிறந்த ஓவியமாக உயர்த்தும் வாய்ப்பு, பெரும்பாலும் அந்தக் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது.   இன்றைய நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் சற்றுக் கூடுதலான அக்கறையுடன் கவனிக்கப் படவேண்டியுள்ளது. நியாயமாக, எந்த விளைவுகளைப்…

கடந்த காலத்திலிருந்து கற்றதும், பெற்றதும் என்ன? Kadantha Kaalaththilirunthu Katrathum, Petrathum Enna?

தன்னம்பிக்கையின் பதிவுகள்: நாம் அனைவருமே, காலம் நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்தநாளைச் சந்திக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வகையில் நம்மை வடிவமைத்து வளர்த்திருக்கின்றன.   கடந்துவந்த நினைவுகளை வாழ்க்கையின் அனுபவங்களாக மாற்றும் சக்தி காலத்திற்கே உண்டு.  இன்றைய காலகட்டத்தில்…

🗺நமது சிந்தனைகளுக்கு வழி வரைபடம் உள்ளதா? Namathu Sinthanaigalukku Route Map Ulladhaa?

சிந்தனை செய் மனமே: நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும் நம் சிந்தனைகளே பொறுப்பு ஆகின்றன.  எனவே, நம்…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்: WISH YOU HAPPY NEW YEAR

  WISH     YOU      HAPPY       NEW       YEAR   அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள்,  புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம்.  அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து,…

நீதியின் பார்வையில் சரியானது எது? Neethiyin Paarvaiyil Sariyaanathu Ethu? Types of Perspective.

நண்பர்கள்: சின்னதம்பி, பெரியதம்பி என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  இவர்கள் இருவரும் காட்டு வழியாக நடந்து அடுத்த ஊருக்குப் பயணம் சென்றார்கள்.  அப்போது மாலை வேளையாகி விட்டது.  மேலும் மழையும் வந்து விட்டது.  இதனால் அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குள் சென்றார்கள். …

தயக்கத்தைத் தகர்க்கும் ஆயுதம் எது? Thayakkaththai Thakarkkum Aayutham Ethu? How To Do Break The Hesitation?

தயக்கம்: மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.  சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள்.  ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும்.   இதுவே அவர்களுடைய நல்ல எண்ணங்களைச் செயலாக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.  இந்தத்…

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? Anbirkku Undo Adaikkum Thaazh? The Greatness Of Love.

உயிர்களிடத்தே அன்பு வேண்டும்:           "அன்பின் வழியது உயிர்நிலை" என்று வள்ளுவர் கூறியது போல், அன்புடன் இருப்பதே உயிருடன் இருப்பதற்கான உண்மையான ஆதாரம் ஆகும்.  உலகில் வாழும் உயிர்களிடத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் அன்பு செலுத்துவதே அன்பின்…

⌚காலத்தை வென்றவர். யார்? Kaalaththai Vendravar. Yaar? Time Creates The Power.

சுற்றும் பூமி: தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் வரிசையாக இருக்கின்றன.  இவற்றை எப்போது, எப்படிச் செய்வது என்று திட்டமிடும்போதே மேலும் இரண்டு வேலைகள் வரிசையில் வந்து சேர்ந்து விடுகின்றன.  நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லையே என்று தோன்றுகிறதா?   அதற்குக்…

முயற்சி திருவினை ஆக்கும். எப்படி? Muyarchi Thiruvinai Aakkum. Eppadi? Effort Will Pay Off.

முயற்சி உடையார்: நாம் அனைவருமே எப்போதும்,  ஏதாவது ஒரு செயலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறோம்.  ஆனால் எல்லோருடைய செயல்களும் எல்லா நேரத்திலும் திருவினைகளாக வெற்றி அடைகின்றனவா?   இன்று, வெற்றியின் வெளிச்சத்தில் பிரகாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், உறுதியான…