நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும்…

உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன.  எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன.  இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.   தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.  இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை.  இன்னும் சொல்லப்போனால்…

அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?

அன்புமொழி:  தன்னைப் போல பிறரை என்னும்  தன்மை வேண்டுமே  அந்தத் தன்மை வர உள்ளத்திலே  கருணை வேண்டுமே!  என்ற பாடலைக் கேட்டிருப்போம்.  இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து உதவும்…

வெளித்தோற்றமும் மனமாற்றமும். Veliththotramum Manamaatramum. Appearances May Change The Mindset.

அடையாளம்: வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனாலும் நாம் அத்தகைய ஒரு சிந்தனைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே?   அதன் அடிப்படையில்தான் நாமும் நம்முடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம்.  இதைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும்…

காட்சிப் பிழையா? கருத்தில் பிழையா? Kaatchi Pizhaiya? Karuththil Pizhaiya? Reality vs Hypothetical

குட்டி கதை: பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத்  தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான்.  தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.  தன்னுடைய சிறிய கைப்பையை அருகில்…

இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள  இதன்பால்  இல்லாத எப்பொருளும் இல்லையாற்-  என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு…

நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?

நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு  இருந்தது.  அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது.  எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…

அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?

கவியரசர் கன்ணதாசன்: "பருத்தி என்றொரு செடி வளர்ந்தது  பருவப் பெண்ணைப் போலே - அந்தக்  கரிசல் கழனிமேலே - அது  சிரித்த அழகில் காய் வெடித்தது  சின்ன குழந்தை போலே - அந்த  வண்ணச் செடியின் மேலே!..." "சலவை செய்து வாசம்…

மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.

சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான்.   யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான்.  அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.…

மனநலம் காக்கும் குண நலன்கள்: Mana Nalam Kaakkum Kuna Nalangal: The Traits to Protect Mental Health.

மனநலம்: உடல்நலம் காப்பதற்குச் சரிவிகித உணவும், அளவான உடற்பயிற்சியும் உதவுவது போல, மனநலம் காப்பதற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் அவசியமாகிறது. மனச்சோர்வு ஏற்படுத்துகின்ற சில சூழ்நிலைகளை மனவுறுதியோடு கடந்து செல்வதற்குத் தேவையான சில குணநலன்களை இன்றைய நம் சிந்தனையில் பார்க்கலாம். பொறுமை: பெரும்பாலான நேரங்களில்…