சமயோசிதமான செயலே சாமர்த்தியம். Samayosithamaana Seyale Samarththiyam.Simple but Significant.

மாற்றுச் சிந்தனை: வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்  வங்கிக்குச் சென்றார்.  அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும்,  கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி செய்யப்பட்டச் சீட்டைக் கொடுத்தார்.   காசாளர் அந்த வயதான பெண்மணியை, வெளியே…

வெற்றி நிச்சயம், அதில் மகிழ்ச்சி முக்கியம்:Vetri Nichchayam, Athil Makizhchchi Mukkiyam.Success is Sure, Do Ensure The Happiness in That.

தொட்டுவிடும் தூரம்தான். சிறந்த குருவும், அவருடைய சீடரும் வெற்றியூர் என்ற ஒரு ஊரை நோக்கி  சென்றுகொண்டிருந்தனர்.  நீண்ட தூரம் நடந்த பின்னர், எதிரில் வந்த விவசாயிடம், ஊரின் பெயரைச் சொல்லி,  "அந்த ஊர் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?", என்று சீடர் கேட்டார்.  அந்த விவசாயி, "இன்னும் இரண்டு கிலோமீட்டர்…

மனதின் ஊக்கமே செயலின் ஆக்கம். Manathin Ookkame Seyalin Aakkam. Ability of Action is the Porduct of Motivation.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத் தனையது உயர்வு. என்று மனதின் சக்தியைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகக் கூறியுள்ளார்.    பொருத்தமான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றிபெற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருக்கிறது.  இந்த எண்ணம் ஆக்கபூர்வமான செயலாக, மாபெரும் சாதனையாக…

காலமும், கடமையும் வெற்றியின் கைகள். Kaalamum, Kadamaiyum Vetriyin Kaikal.Schedule and Commitment are Hands of Victory.

கவசம்: உணவு, உடை, வாழ்க்கை முறை என எல்லாமே பருவக்காலத்திற்கு ஏற்றபடி, காலநேரம் பொறுத்தே அமைகிறது.  காலமும், கடமையும் வாழ்க்கையின் கவசம் என அறிந்த நம் மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால், சூரிய ஒளியில் கடுமையாக உழைத்தார்கள், களைப்புத் தீர இரவில் நன்கு உறங்கினார்கள், அதன்…

உணவே மருந்து, உணவே விருந்து. Unave Marunthu, Unave Virunthu. Life Travels With Food.

ஒளவையார்: ஒருநாள் உண்ணாமல் இரு என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறாய், இரண்டு நாட்களுக்குத் தேவையானதை இப்போதே எடுத்துக்கொள் என்றாலும் செய்ய மாட்டேன் என்கிறாய், என்நிலை தெரியாமல் தினமும் பசிக்கின்ற வயிறே உன்னோடு வாழ்வது மிகக் கடினமாக இருக்கிறது. ஒரு நாள் உணவை ஒழி…

தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை: உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது.  தன்னுடைய ஒன்றரை வயதில், பார்வைப் புலனையும், செவிப்புலனையும், (அதன்…

தகுதியின் அளவுகோல். கதையும், கருத்தும். Thaguthiyin Alavukol. Kathaiyum, Karuththum. Standard of Quality.

ஒரு நாட்டின் மன்னர் தன் நாட்டுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக இருந்தார்.  அதனால் அனுபவம் நிறைந்த மதியுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தி நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்.   மேலும், மக்களின் உண்மையான நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல…

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல நாட்களாக எண்ணற்ற மனிதர்களின் உழைப்புகளைப் …

ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது.  இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது.  எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…

குகையிலிருந்து ஒரு பயணம். Gugaiyilirunthu Oru Payanam. Travel of Thoughts and Technology.

நிமிர்ந்த மனிதன்: இயற்கையான வளங்களும் எண்ணற்ற உயிர்களும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், மனிதனின் அறிவு வளர்ச்சிக்குச் சாட்சியாகவும் பல்வேறு பொருட்கள் பெருமளவு ஆக்ரமித்து இருக்கின்றன. கண்டுபிடிப்புகள் என்பவை நெருப்பு, உடை, சக்கரம் போன்ற அடிப்படை தேவைகளைக் கடந்து, மனித அறிவின் ஆற்றலை அறிவிக்கும் வகையில், அபாரமான…