லாக் டவுன் கலாட்டாக்கள்: கலகலப்பா? Lock Down Galaattaakkal: Kalakalappaa?

முன் அறிவிப்பு: லாக் டவுனில் சீரியசான விஷயங்கள் பல இருந்தாலும்,  கொஞ்சம் லைட்டர் சைடாக சில செய்திகளை இதில் காணலாம்.  சமீபத்தில், தோழிகள் சிலர் லாக் டவுன் பற்றிய தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் சில செய்திகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் பதிவில் கூறலாம் என்று…

திருமதி ஒரு வெகுமதி, யாருக்கு? Thirumathi Oru Vegumathi, Yaarukku?

ஒரு கதை சொல்லட்டுமா? நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் முல்லா, அவர் ஒரு நாள் மதிய வேளையில், தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.  அப்போது, அந்த வழியாக வந்த அவருடைய நண்பர்  முல்லாவைப் பார்த்ததும், அவரிடம் பேசிக்கொண்டே அருகில் அமர்ந்தார்.   தொடர்ந்து பேசிய அவர், முல்லாவிடம், "என் மனைவி…

கல்வியா, செல்வமா, வீரமா? Kalviya, Selvama, Veerama? Legendary Persons.

கல்வியா, செல்வமா, வீரமா? இது  நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த  மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை.  ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு,  இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று, அந்தப்…

மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்: இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் "மாதமும் மாரிப் பொழிகிறதா?" என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார், என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.   உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும், மழையின்  சரியான அளவை அந்தத் துறைக்கான அமைச்சரே அதிகாரப்…

வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network

அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.   இவற்றுள் கல்வி…

திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு: ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.   மாணவர்களும் புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே மிகவும்…

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…

மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.

மனதின் சக்தி: மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை.  இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி.  இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி…

📓 புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.

யாதுமாகி: புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன்  உரையாடுதல்  போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது.  மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது.  குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின் பாதுகாப்புத் தந்து வழிகாட்டக் கூடியது. மதிப்பீடு  செய்யும் உறவினரைப்…

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும்,   நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன.  அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  அமைகிறது.     இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும்…