அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி, இயற்கையின் இயக்கமாகும் இறைவன் பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும் மதித்து வந்த இறைவன் அவன். மனமே முழுதும் அன்பென்றால், அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும் எண்ணங்களைச் …
சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம் நாடும்…
சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே! உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே! சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே! காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…
பார்வைகள்: வட்ட நிலவே தேயும், வளரும் என்று வந்தவர் எல்லாம் சொன்னாலும், அமாவாசை அன்று பௌர்ணமி இன்றென அந்தாதியே பாடினாலும், நிலவின் மாற்றம் நிலத்திலும் தெரிவதாய் நிரூபணமே செய்தாலும், வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் சோதிடம் ஆருடம் …
காலம்: இளமையின் பிரகாசத்தில் அனுபவ நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால், இரவில் சூரியன் இருப்பதுமில்லை. இதுவும் இயற்கைதான் மறுப்பதற்கில்லை. செயல்பாடு: குகையில் பிறந்து, கூடி வளர்ந்து, இனத்தில் ஒன்றாய் தெரிந்தாலும், தான் வாழும் இடத்தை …