ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும்  காரணமாக இருக்கின்றன.  தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது  என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் பிறருடைய தாக்கங்கள் இருக்காதா என்று யோசிக்கலாம்,…

கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்   செல்வத்துள் எல்லாம் தலை ".  அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும்.  இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின்  அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?…

அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.

ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான்.  ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது.  அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம்…

உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.

எது சிறந்த செயல்?:  உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே.  பேச்சும் செயலே, மௌனமும் செயலே.  விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே.   ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம்.  குருவின் மௌனம் உபதேசம்.  (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை.  கைகேகியின்…

பலமும், பலவீனமும். கையாள்வது எளிதா? Balamum, Balveenamum. Kaiyaalvathu Elitha? Chances to Strengthen Our Life.

விவேகம்:  கண்களின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான பார்வைக்காக அணியப்படும் மூக்குக் கண்ணாடிகள், வெப்பத்திலிருந்து  கண்களைப் பாதுகாக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள்,  பொருளைப் பெரிதுபடுத்திக்  காட்டும் தொழில் சார்ந்த பூதக்கண்ணாடிகள், என சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்  பலவிதமான கண்ணாடிகள் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், இயல்பாக இயற்கையைப் பார்க்க வேண்டிய…

பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். Paarvaikal Palavitham Ovvondrum Oruvitham. Types of Angles and Altitude.

அளவுகோல்: எண்ணம்:  வெளிப்படும் சூழ்நிலையைப் பொருத்தும், வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பொறுத்தும், எண்ணத்தின் மதிப்புத் தீர்மானிக்கப்படுகிறது.  வாழ்க்கையின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்த இத்தகைய எண்ணங்களைப் பற்றிய நம்முடைய பார்வைகளைச் சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, அந்த எண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பது நம்…

கடமையே கண்ணாயினார் யார்? Kadamaiye Kannayinaar Yaar? Responsibility is Ones Capability.

மிகப்பெரிய அடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தார்.  ஒருநாள் அவர் தவம் கலைத்துக் கண் விழித்தபோது அவருக்கு முன்னால் ஒரு பெரிய உறைவாள் இருப்பதைப் பார்த்தார்.   அழகான வேலைப்பாடுகள் கொண்ட உறையில் இருந்த அந்த வாள், நவரத்தின…

எது உண்மையான அறிவு? Ethu Unmaiyaana Arivu? Which One is Real Knowledge?

ஓர் ஊரில் வீரன் என்பவன் இருந்தான்.  அவனுடைய ஊருக்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டில் விலங்குகள் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக எப்போதும் அவன் வில்லும் அம்பும் தோளில் வைத்திருப்பான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.  அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே  தன்னுடைய குறிக்கோளாக வைத்திருந்தான்.…

மாற்றம் மனதிலும் வேண்டும். Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.

நேற்று போல் இன்று இல்லை: மனிதன், தோன்றிய காலம்முதல் பலவகையான மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலமே தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறான்.  மாற்றம் ஒன்றே மாறாதத் தன்மையுடையது என்று கூறப்படும், இந்த மாற்றம் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முன்னேற்றமாக இருக்கும்போது முழுமையான பலனைத் தருகிறது.  இதனால், சமுதாயமும் வளர்ச்சிப்பாதையில் பெருமையாக நடைபோடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. …

அதிர்ஷ்டம் தரும் அன்னப்பறவைகள். Athirshtam Tharum Annapparavaikal. Way To Attract The Luck.

ஓர் ஊரில் பொன்னன் என்பவன் தன் மனைவி வள்ளியோடு வாழ்ந்து வந்தான்.  ஒருநாள் காலை, வெளியூரில் வசிக்கும் அவனுடைய அண்ணன், பொன்னனைப் பார்க்க அவனுடைய வீட்டிற்கு வந்தார். அவரை அன்போடு வரவேற்ற வள்ளி உணவளித்து உபசரித்தாள்.  பொன்னன் வழக்கம்போல தாமதமாக எழுந்து,…