நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.

நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக  யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார்.  இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத்…

துணை நிற்கும் தொழில் தர்மம். Thunai NirkumThozhil Dharmam. Work Ethics.

ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார்.  அவரிடம் ஒரு குதிரைவண்டி இருந்தது.  அவருடைய வீட்டின் முன்பக்கத் தோட்டத்திலேயே அதை நிறுத்துமிடமும் இருந்தது.  பண்ணையார் வெளியில் எங்குப் போகவேண்டும் என்றாலும் அந்தக் குதிரை வண்டியிலேயேதான் போய்வருவார்.  இதனால் அந்தக் குதிரைக்குச் சற்றுக் கர்வமும் இருந்தது. அதேநேரம் அந்த வீட்டில் இருக்கும் நாய்,…

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும். Malar Pola Malarkindra Manam Vendum. Refreshment of Mind.

பழையன கழிதலும், புதியன புகுதலும். சாதாரணமாக நம் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் அந்தப் பொருளையும், அது சம்பந்தமான முக்கியமான ரசீதுகளையும் உரிய இடத்தில் பத்திரமாக வைப்போம்.  அதனுடைய அட்டைப்பெட்டியை உடனே வெளியில் போட்டுவிடாமல், ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து அந்த அட்டைப் பெட்டியை ஒரு…

எண்ணங்கள் என்ன சொல்கின்றன? Ennangal Enna Solkindrana? Thought Says The Way To Go.

வாய்ப்பே வரம்:  ஒரு ஊரில் வீரன், சூரன் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  ஒருநாள் இருவரும் தங்களுடைய குதிரைகளில் காட்டுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.  மாலை நேரம் ஆகிவிட்டதால் தங்கள் குதிரைகளுக்குத் தேவையான உணவும், நீரும் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து…

விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.

அனைவருக்கும்  இனிய   புத்தாண்டு   நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும்  வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில்…

சமயோசிதமான செயலே சாமர்த்தியம். Samayosithamaana Seyale Samarththiyam.Simple but Significant.

மாற்றுச் சிந்தனை: வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்  வங்கிக்குச் சென்றார்.  அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும்,  கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி செய்யப்பட்டச் சீட்டைக் கொடுத்தார்.   காசாளர் அந்த வயதான பெண்மணியை, வெளியே…

வெற்றி நிச்சயம், அதில் மகிழ்ச்சி முக்கியம்:Vetri Nichchayam, Athil Makizhchchi Mukkiyam.Success is Sure, Do Ensure The Happiness in That.

தொட்டுவிடும் தூரம்தான். சிறந்த குருவும், அவருடைய சீடரும் வெற்றியூர் என்ற ஒரு ஊரை நோக்கி  சென்றுகொண்டிருந்தனர்.  நீண்ட தூரம் நடந்த பின்னர், எதிரில் வந்த விவசாயிடம், ஊரின் பெயரைச் சொல்லி,  "அந்த ஊர் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?", என்று சீடர் கேட்டார்.  அந்த விவசாயி, "இன்னும் இரண்டு கிலோமீட்டர்…

மனதின் ஊக்கமே செயலின் ஆக்கம். Manathin Ookkame Seyalin Aakkam. Ability of Action is the Porduct of Motivation.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத் தனையது உயர்வு. என்று மனதின் சக்தியைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகக் கூறியுள்ளார்.    பொருத்தமான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றிபெற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருக்கிறது.  இந்த எண்ணம் ஆக்கபூர்வமான செயலாக, மாபெரும் சாதனையாக…

காலமும், கடமையும் வெற்றியின் கைகள். Kaalamum, Kadamaiyum Vetriyin Kaikal.Schedule and Commitment are Hands of Victory.

கவசம்: உணவு, உடை, வாழ்க்கை முறை என எல்லாமே பருவக்காலத்திற்கு ஏற்றபடி, காலநேரம் பொறுத்தே அமைகிறது.  காலமும், கடமையும் வாழ்க்கையின் கவசம் என அறிந்த நம் மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால், சூரிய ஒளியில் கடுமையாக உழைத்தார்கள், களைப்புத் தீர இரவில் நன்கு உறங்கினார்கள், அதன்…

உணவே மருந்து, உணவே விருந்து. Unave Marunthu, Unave Virunthu. Life Travels With Food.

ஒளவையார்: ஒருநாள் உண்ணாமல் இரு என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறாய், இரண்டு நாட்களுக்குத் தேவையானதை இப்போதே எடுத்துக்கொள் என்றாலும் செய்ய மாட்டேன் என்கிறாய், என்நிலை தெரியாமல் தினமும் பசிக்கின்ற வயிறே உன்னோடு வாழ்வது மிகக் கடினமாக இருக்கிறது. ஒரு நாள் உணவை ஒழி…